ஜனாதிபதித் தேர்தல் 2019 நாளை நடைபெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிக்களை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டுசெல்கின்ற பணி இன்று தொடங்கியுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வாக்குப் பெட்டிகளை கொண்டும் செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அருவியின் யாழ்.பிராந்தியச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகளுக்கு முழுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.